உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

இலங்கை இராணுவத்தின் வினைத்திறனை முன்னேற்ற இந்திய அரசாங்கம் இணக்கம்


இந்திய இலங்கை இராணுவத்தினருக்கு இடையிலான இரண்டு நாள் கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை புதுடில்லியில் நிறைவடைந்தது. இக்கலந்துரையாடலில் இலங்கை இராணுவத்தின் வினைத்திறனை முன்னேற்ற இந்திய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
இதன்போது இந்திய இராணுவக்கல்லூரிகளில் இலங்கை இராணுவத்தினருக்கு கல்வி சம்பந்தமான பயிற்சிகளை அதிகளவில் வழங்குதல், கலகத்தடுப்பு நடவடிக்கைகளை பகிர்ந்துக்கொள்வது போன்ற விடயங்களில் இரண்டு தரப்பும் இணக்கத்தை வெளியிட்டன.

இதனை தவிர இலங்கை இராணுவத்தினருக்கு பல பயி;ற்சித்திட்டங்களையும் வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது. இதில் மனிதாபிமான பயிற்சிகளும் உள்ளடங்கும். ஆங்கிலப்பயிற்சி மற்றும் விளையாட்டுத்துறையிலும் இந்திய இலங்கை இராணுவத்துக்கு உதவவுள்ளது 

நன்றி தமிழ் win