உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

இராணுவம் செய்தது தவறு.. ஒப்புக்கொண்ட மைத்திரிபால ..!

கொழும்பு: ''இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும,'' என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது ராணுவத்தினரால் 40,000 க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டதாக ஐ.நா., புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதுவரை இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக பேசி வந்த சிறிசேனா, முதல் முறையாக எதிராகவும், பல அதிர்ச்சிகர தகவல்களையும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இலங்கை இறுதிக்கட்ட போர் குறித்து சிறிசேனா பேசியதாவது:
இலங்கையில், விடுதலை புலிகளுக்கு எதிராக 2009 ம் ஆண்டு நடந்த
இறுதிக்கட்ட போரின் போது தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்போது ஆட்சியில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, ராணுவத்தினர் சிலர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர். இதை மனசாட்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
போரில் நாட்டுக்காக சண்டையிட்டவர்களை ஆளும் கட்சி வேட்டையாடி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இதனை நான் நிராகரிக்கிறேன். ராணுவம் தன் மீதுள்ள கறையை அகற்ற வேண்டிய நேரம் இது.

ராணுவத்தின் கட்டுப்பாட்டை மீறி சில விஷயங்கள் நடந்துள்ளன. அவை ஜனநாயகம் மற்றும் மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானதுடன், சட்ட விரோதமானதும் கூட.
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. போர்க்குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்
பட்டுள்ளவர்கள்
நிரபராதிகள் என தெரிய வந்தால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள், என்றார்.