உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
Showing posts with label தமிழக. Show all posts

ரஜினியும், கமலும் தமிழகத்திற்கு தேவையில்லை - அமீர் ஆவேசம்.!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறப்பு மற்றும் முதுபெரும் தலைவர் கலைஞர் உடல்நிலை ஆகியவற்றினை கருத்தில் கொண்டு, அரசியல் தளத்தில் கால் பதித்திட முயன்றுவருகின்றனர் திரைத்துறை பிரபலங்கள். அவர்களில் ரஜினியும், கமலும் முதல் இடத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தொலைக்காட்சி நேர்காணலுக்கு அளித்த செவ்வியில் இயக்குனரும், நடிகருமான அமீர் " தன்னமலற்ற, உண்மையும் நேர்மையும் கொண்ட நபர்களே ; தலைவர்களே தேவையே ஒழிய, தங்களது சுயலாபத்திற்காக திரைத்துறையில் பெற்ற செல்வாக்கினை அரசியல் தளத்தில் அறுவடை செய்திட முயல்பவர்கள் தமிழகத்திற்கு தேவையில்லை. அந்த வகையில் பார்த்தோமெனில், ரஜினியும் கமலும் தமிழகத்திற்கு தேவையில்லை" என தெரிவித்துள்ளார் அமீர்.

தொடர்ந்து பின்வாங்கும் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை திரட்டி அரசியலில் ஈடுபடுவது குறித்து சூசகமாக அறிவித்ததால் அவர் எப்போது அரசியலில் குதிப்பார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. இதற்கிடையில், நடிகர் கமலும் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்து விட்டதால், ரஜினிகாந்த் எப்போது அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை விமான  நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த்,” அரசியல் களத்தில் இறங்குவதற்கான அவசரம் தற்போது இல்லை. எனது பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதிக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க உள்ளேன். காலா படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.